சென்னை: பத்து தல படத்துக்கு நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ரோகிணி திரையரங்க நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அனுமதிக்கக் கூடாது என்பதால் தடுத்தோம் என்று நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது. சுற்றியுள்ளவர்கள் வற்புறுத்தியதால், குழந்தைகளுடன் வந்த நரிக்குறவர் குடும்பத்தினர் படம் பார்க்க அனுமதித்துள்ளனர்.